Klemen Pisk

poet, writer, translator and musician

Poem in Czech

ஒரு துறவியும் ஒரு ஓநாயும்

ஒரு துறவி மணலில் ஒரு கோடு வரைந்து,
"நீ இந்த கோட்டைத் தாண்டாதே,
இந்த வட்டத்திற்குள் இருக்க வேண்டும்,
தாண்டலாம், ஆனால் கோட்டின் மேல் அல்ல" என்றார்.
ஒரு புயல் வந்தது, கோடும் மறைந்து விட்டது.
அந்த வட்டத்திற்குள்ளேயே ஒரு ஓநாய் நின்றது.
குளிரும் மழையும் அதை வாட்டியது,
ஆனாலும் அது நகரவில்லை.
மணலில் தென்படாமல் அழிந்து விட்ட
அந்தக் கோடு இன்னும் இருக்கிறதா
என்றே அதற்குத் தெரியவில்லை.

Translated into Tamil by Ramachandran Natarajan